2017 வைகாசி மாத கடக ராசி பலன்கள்

இரண்டு, பத்துக்குடைய சூரியனும்,

செவ்வாயும் லாபஸ்தானத்தில் இணைந்து குருபார்வையில் இருப்பதாலும், குருபகவான் தனது ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தைப் பார்த்து உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களில்

இருந்து உங்களை விடுவிக்க பணவரவை அருளும் நிலையில் இருப்பதாலும் கடக ராசிக்கு வைகாசி மாதம் தொல்லைகள் தராமல் எதிலும் ஒரு சீரான செயல்பாட்டை தரும் மாதமாக இருக்கும்.

வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இந்தமாதம் வீட்டுக்கனவு நனவாகும்.

யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதும் பாக்கியாதிபதி குருபகவான் அவர்களைப் பார்ப்பதும் செலவுகளை தந்தாலும் அதற்கேற்ப பணவரவுகளையும்,

சுபச்செலவுகள் மூலமாக குடும்ப சந்தோஷங்களையும் தரும். இரண்டாமிடத்திலிருக்கும் ராகுவால் கணவன் மனைவியிடையே

கருத்து வேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது என்பதால் இப்போதிலிருந்தே அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.

மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான

விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் இருக்கும்.

அதேநேரம் மனோதைரியம் கூடுதலாகும். இரண்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும்.

அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம்.