குல தெய்வங்கள் படி யோகங்கள்

குல தெய்வம்

குலம் என்பது நம் முன்னோர்கள் பிறந்து வாழ்ந்து வந்த பரம்பரையில் முதல் தெய்வங்கள் நம் குலம் காக்க இருக்கும் தெய்வங்களையும் குலதர்மங்களையும் கடைபிடிக்க வேண்டும், குலவழக்கம் கடைபிடிக்க வேண்டும். முன்னோர்கள் வழிபட்டு வந்த முறைகள் பழக்க வழக்கங்கள் இந்த மாதிரி உள்ள வஷயங்கள் தற்போது மறந்து வருகிறார்கள் இவைகளை ஆராய்ந்து உங்களுடைய கோத்திரங்களை கண்டுபிடித்து கோஹ்திர மகாரிஷிகளின் குணங்கள் அவர்களுக்கு பிடித்த படப்புகளை வைப்பது, அவர்கள் வாரிசுகள் என்பதை உணர வேண்டும். இதை தான் முன்னோர்கள் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள். குல கோத்திரம் அற்றிந்து பெண்ணைக் கொடு என்று கூறுகிறார்கள்.பழமையான சாஸ்திர சம்பிரதாயங்கள் தற்சமயம் நாம் மறந்து இருந்து மானாவாரி சாகுபடி போல் நம் சந்ததிகளை வளர்த்து வருகிறோம். இனியாவது நல்வழியில் செல்வதற்காக குலம் கோத்திரம் அறிந்து நடப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.