சிகரத்தை அடைவதற்குச்…

வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால், போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தாள், நாக்கு கேட்டதை எல்லாம் அதற்குக் கொடுக்க முடியாது. வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

வாழ்க்கையில்  நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதோடு ஒட்டிப் பிறந்த நன்மைகளோடு தீமைகலோடும்தான் அது வரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நாணயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்தெடுத்தால், அதன் மறுபக்கத்தையும் சேர்த்துத்தான் நீங்கள் தேர்தெடுக்கீறிர்கள். பிரச்சனைகளற்ற, ஆசிவதிக்கப்பட்ட  ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகாத்மக்களால் கூட நடத்த முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.

கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒரு சில பிரச்சைகள் மட்டுமே இருக்கும். ஒரு பெரிய ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அதிகமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவுதான். ஆனால் உங்களது முழுத்திறமையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு குச்சியின் ஒரு முனையைப் பிடித்து நீங்கள் தூக்கும்போது, மறுமுனையை நீங்கள் ஏற்கனவே தூக்கிவிட்டீர்கள். செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற முடியும். சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாகச் சென்றடையவில்லை.

என்ன இருந்தாலும், வரலாற்றைப் படிப்பவனுக்கும் வரலாற்றைப்  படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: ” வெள்ளியைச் சுத்தப்படுத்தும், மாசு அகற்றும் நபர்போல அவர் உட்கார்ந்திருப்பார்.” கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன? அந்த வாரம், அக்குழுவில் இருந்த ஒரு பெண்மணி, வெள்ளி உலோகக் கொல்லன் ஒருவன் வேலை செய்வதைப் பார்க்கச் சென்றாள். அவன் வேலை செய்வதை அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை எடுத்துத் தீயில் வைத்து அது சூடாவதற்காகக் காத்திருந்தான். வெள்ளியைத் தீயின் நடிவில் வாழ்க்கை வேண்டும். ஏனெனில், அங்குதான் சூடு அதிகமாக இருக்கும். அது அனைத்து மாசுகளையும் எரித்து விடும் என்று கொல்லன் எடுத்துரைத்தான். முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்மையா என்று அவள் கேட்டாள். அதை உறுதி செய்த கொல்லன், முழுநேரமும் அங்கு உக்கார்ந்திருக்க வேண்டும். என்பது மட்டுமல்லாமல், தெரிவித்தான். அதிகப்படியாக ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால், அது உருகி ஓடிவிடும். உடனே மாசுகள் அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்? ” அவன் அதற்குப் புன்னகைத்துக் கொண்டே இவ்வாறு பதிலளித்தான்: ” ஓ! அது சுலபம்……. என் உருவத்தை நான் அதில் பார்க்கும்போது!”

வாழ்க்கைப் பிரச்சனைகள் உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்துக் கண்ணை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களிடம் தெரியும்வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனின் உள்ளும் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஓர் உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உலை.